எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் மூக்கனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளுக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (40), கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஸ் (15), அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் உறவினரான பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கரிபிரான் (65) என்பவருடன், நாட்டு துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் இரவு வேட்டையாட சென்றனர்.
அவர்கள் திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பாட்டு, காளியம்மன் கோவில் வட்டம் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றனர். அந்த பகுதியில் சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட பயிர்களை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைத்திருந்தனர்.
இதனை அறியாத இவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கிக் கொண்டனர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று, 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
நேற்று வயலுக்கு வந்த விவசாயிகள், அங்கு 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்,
இரவு நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக நீதி என்பவர் தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஓயர்கள் அமைத்து உள்ளார்.
நேரடியாக மின்சார கம்பம் மற்றும் விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 3 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனைக்கு. அவர்களது உறவினர்கள் திரண்டு வந்தனர். குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 4 days ago |
-
சீக்கியர்கள் குறித்த பேச்சு: பா.ஜ.க. மீது ராகுல் குற்றச்சாட்டு
21 Sep 2024புதுடெல்லி : சீக்கியர்கள் குறித்த தனது பேச்சு குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ம.நீ.ம. தலைவராக மீண்டும் தேர்வு: கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
21 Sep 2024சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்
21 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
-
உஸ்பெகிஸ்தானுடன் இந்தியா டிரா
21 Sep 2024ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.
-
வங்கதேசத்திற்கு வெற்றி இலக்காக 515 ரன்கள் நிர்ணயம்: முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்தியா
21 Sep 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்காக 515 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
-
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவிப்பது மகிழ்ச்சி: கில்
21 Sep 2024சென்னை : இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்துள்ளார்.
-
ஒருநாள் போட்டிகளில் இங்கி. வீரர் ரஷித் சாதனை
21 Sep 2024லீட்ஸ் : ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
-
டோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்
21 Sep 2024சென்னை : வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் (109 ரன்) சதம் அடித்ததன் மூலம் டோனியின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2024.
22 Sep 2024 -
நெல்லை, தென்காசியில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தகவல் : தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்
22 Sep 2024நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2024.
22 Sep 2024 -
பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு : நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
22 Sep 2024திருவனந்தபுரம் : மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.
-
நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: ஈரானில் 30 தொழிலாளர்கள் பலி : மாயமான 24 பேரை தேடும் பணி தீவிரம்
22 Sep 2024டெக்ரான் : ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 30 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமுற்றனர்.
-
இந்தியா - ஜப்பானின் உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை : பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல்
22 Sep 2024வில்மிங்டன் : இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவையாக உள்ளன என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வ
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
22 Sep 2024நவ்ஷேரா : காஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தின் போது திட்டவட்டமாக தெரிவித்தார
-
டெலிகிராம் செயலிக்கு உக்ரைன் அரசு தடை
22 Sep 2024கீவ் : டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 297 பழங்கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா
22 Sep 2024வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 297 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.
-
ஆந்திர முதல்வருடன் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் சந்திப்பு : பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு
22 Sep 2024ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.
-
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விருப்பம்: கமலா ஹாரிஸ் தகவல்
22 Sep 2024வாஷிங்டன் : டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன் என கமலா ஹாரிஸ் கூறினார். இந்த நிலையில் கமலா ஹாரிஸின் அழைப்பை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
-
தண்டவாளத்தில் கிடந்த கியாஸ் சிலிண்டர்: பெரும் விபத்து தவிர்ப்பு : உ.பி. போலீசார் தீவிர விசாரணை
22 Sep 2024பெரம்பூர் : உ.பி.யில் தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-
இந்தியாவுடனான அமெரிக்க உறவு வலுவானதாக உள்ளது : அதிபர் ஜோ பைடன் கருத்து
22 Sep 2024வாஷிங்டன் : இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது
22 Sep 2024சென்னை : சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
புரட்டாசி மாத கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
22 Sep 2024திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
திறமை, உழைப்புக்கு வாய்ப்பு பா.ஜ.க.வில் மட்டுமே கிடைக்கும் : நிர்மலா சீதாராமன் பேச்சு
22 Sep 2024சென்னை : திறமை உழைப்புக்கு பா.ஜ.க. போதுமான வாய்ப்பு வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் : நெல்லையில் எல்.முருகன் பேட்டி
22 Sep 2024நெல்லை : இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.