எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் , 2-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். இன்று முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
_______________________________________________________
உலகக்கோப்பை பாடல் வெளியீடு
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில், இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. பிரபல பாடகிகள் ரியா துகால், சிம்ரன் துகால், ஸோ சித்தார்த், சுசிதா ஷர்க் ஆகியோர் அடங்கிய 'WISH' மகளிர் இசைக்குழுவினர் 'வாட்எவர் இட் டேக்ஸ்' என்ற இந்த பாடலை பாடியுள்ளனர். பே மியூசிக் சவுத் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடலுக்கு பார்த் பரேக் இசையமைக்க, மிக்கி மெக்லியாரி இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வீடியோவும் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
_______________________________________________________
தொடரை வென்றது ஆஸி.,
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அமெலியா கெர் 4 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக சுதர்லேண்ட் மற்றும் வாரிஹாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 36 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 33 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலியா அசத்தியுள்ளது.
_______________________________________________________
பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு
ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கங்களை வென்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தமிழகத்தை சேர்ந்த அக்கா, தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் சென்னைக்கு திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
_______________________________________________________
'லப்பர் பந்து' படத்திற்கு பாராட்டு
லப்பர் பந்து படத்தை பாராட்டி இந்திய வீரர் அஷ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இது ஒரு திரைப்படத்தை பற்றியது. திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன். ஆனால், நேற்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் கிளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.
பொதுவாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் அதன் கதைக்கருவை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களைதான் சொல்வார்கள். 'லப்பர் பந்து' படத்தில் அப்படி ஏதும் இல்லாததால் இது எனக்கு ஸ்பெஷலாக தோன்றியது. மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
_______________________________________________________
வேகப் பந்துவீச்சாளர் விலகல்
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. முதல் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இலங்கை வேகப் பந்துவீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோவுக்கு பயிற்சியின்போது, காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக அணியில் வலதுகை ஆஃப் ஸ்பின்னரான நிஷான் பெய்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 50 சதவிகித வெற்றிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 42.86 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி 4-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்5 days 4 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 6 days ago |
-
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் : ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்
24 Sep 2024ஈரோடு : தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
-
வேலூர் மருத்துவமனையில் இருந்து மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
24 Sep 2024வேலூர் : வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 Sep 2024சென்னை : உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது
-
மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது : வரும் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
24 Sep 2024சென்னை : கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வரும் 30-ம் த
-
உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பதிவு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Sep 2024சென்னை : சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளார் என்று அமைச்சர் மா.
-
மதுரை மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
24 Sep 2024மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தா
-
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து: இயக்குநர் மோகன் ஜி கைது
24 Sep 2024திருச்சி : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Sep 2024சென்னை : கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆ
-
தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
24 Sep 2024சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் கட்டுப்படுத்தத் தவறிய
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்
24 Sep 2024சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் பதில்
24 Sep 2024பெங்களூரு, ஐகோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் சுட்டுக்கொலை
24 Sep 2024சென்னை, தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்
24 Sep 2024ஜெருசலேம், இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப் படைத்தளம் , நாசரேத் நகரம், மஹிடோ விமானப் படைத்தளம், ஹைபா, அப்லா போன்ற நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 200-க்கும் மேற்பட்
-
லட்டு குறித்து கருத்து: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
24 Sep 2024சென்னை, லட்டு குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி.
-
போப் ஆண்டவருக்கு உடல்நலக் குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
24 Sep 2024வாடிகன் சிட்டி, உடல்நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவரின் திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி
-
கான்பூர் சென்றது இந்திய அணி
24 Sep 2024இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-09-2024.
24 Sep 2024 -
இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
24 Sep 2024கொழும்பு, இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் அனுரா திசநாயகே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிக்கை
24 Sep 2024பெங்களூரு, நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பாலியல் வழக்கு: பிரபல மலையாள நடிகர் முகேஷ் கைதாகி ஜாமினில் விடுதலை
24 Sep 2024கொச்சி : நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டில் மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.
-
சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த திருப்பதி முன்னாள் தேவஸ்தான தலைவர் மீது வழக்குப்பதிவு
24 Sep 2024திருப்பதி : முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்ச்சித்த திருப்பதி கோவில் முன்னாள் தேவஸ்தான தலைவர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
முன்னாள் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பு காரணமா? ஈரான் எம்.பி. சந்தேகம்
24 Sep 2024டெக்ரான், ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் எம்.பி.
-
மூடா வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி
24 Sep 2024பெங்களூரு, நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி உறுதி செய்தது நீதிமன்றம்
24 Sep 2024சிங்கப்பூர், சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், தம் பதவிக் காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றதற்காகவும், நீதிக்கு இடையூறு செய்தமைக்காகவும், அவரை குற்றவாள
-
பாலியல் புகார்: பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
24 Sep 2024திருவனந்தபுரம், பாலியல் புகாரில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.