எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக் கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது என்று சென்னையில் நடந்த தென்மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக் கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடியும்.
ஏன், தமிழகத்தில் கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பக் கூடியவர்களைத் தேடி கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியே, தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கு அமைதியின்மையை உருவாக்க ஏதாவது வதந்தியைப் பரப்புவீர்களா என்று யூடியூபர் ஒருவரது வழக்கில், சமூக வலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியிருந்ததை, இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆகவே, சமூக வலைதளங்களில் வரக் கூடிய வதந்திகளைப் பற்றியும், நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்துக்கு, குறிப்பாக போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கு இடையே செயல்படக்கூடிய குற்றவாளிக் கும்பல்கள், மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைகளில், மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பொறுப்பை ஏற்றுள்ளது.
அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து நம் குடிமக்கள் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம்.
ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். போதைப் பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நமக்கு ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களையும் காப்பதோடு அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இலங்கை அணி அறிவிப்பு
18 Oct 2024வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நடிகர் கமல்ஹாசன் கண்டனம்
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
முல்தான் டெஸ்ட்டில் பாக். வெற்றி: நோமன் அலி சுழலில் வீழ்ந்தது இங்கிலாந்து
18 Oct 2024முல்தான் : முல்தானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி சூழலில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி.
-
ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
18 Oct 2024சென்னை : ஒரு சவரன் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்குகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நடிகர் கமல்ஹாசன் கண்டனம்
18 Oct 2024சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சர்பராஸ்-கோலி நிதான ஆட்டம்: 3-ம் நாள் முடிவில் இந்தியா 231 ரன்கள்
18 Oct 2024பெங்களூரு : நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூருவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ்-கோலி நிதான ஆட்டத்தால் இந்திய அணி
-
52,000 பேர் ஆன்லைனில் முன்பதிவு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு : தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு
19 Oct 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய மைல்கல்
18 Oct 2024பெங்களூரு : டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-10-2024.
19 Oct 2024 -
ஆண்டறிக்கை தேதிப்படியே போட்டித்தோ்வுகள் அறிவிப்பு : டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
18 Oct 2024சென்னை : திருத்தப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேதிகளின்படியே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி
-
பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
18 Oct 2024புதுடெல்லி, நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால் ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தற்போது
-
ரஞ்சி டிராபியில் டெல்லிக்கு எதிராக சாய் சுதர்சன் இரட்டை சதத்தால் தமிழகம் வலுவான தொடக்கம்
18 Oct 2024டெல்லி : ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் இரட்டை சதத்தால் முதல் நாள் முடிவில் தமிழகம் 379 ரன்கள் குவித்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி : சென்னை முதன்மை அமர்வு உத்தரவு
19 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
19 Oct 2024சென்னை : இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
19 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் தீவிரம் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி
19 Oct 2024காசா : இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
-
100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி : துணை முதல்வர் உதயநிதி தகவல்
19 Oct 2024தி.மலை : விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
-
இந்திய தூதகரத்தை மூட வலியுறுத்தி கனடாவில் சீக்கிய அமைப்புகள் பேரணி
19 Oct 2024ஒட்டாவா : இந்திய தூதரகத்தை மூட வலியுறுத்தி கனடாவில் வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் சீக்கிய அமைப்புகள் பேரணியாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
தீபாவளி பண்டிகை: புதுவையில் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
19 Oct 2024புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தாவில் நீடிக்கும் போராட்டம்: மாநில அரசுக்கு நாளை வரை ஜூனியர் டாக்டர்கள் கெடு
19 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தாவில் 15-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் நாளை 21-ம் தேதிக்குள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு போரா
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
19 Oct 2024கடலூர் : மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
-
தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
19 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூருவில் இன்று கன்னடர் - தமிழர் மாநாடு
19 Oct 2024பெங்களூரு : பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு இன்று நடைபெறுகிறது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு நிர்ணயிப்பது கடினம் : ரஷ்ய அதிபர் புடின் சொல்கிறார்
19 Oct 2024மாஸ்கோ : உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
மெக்சிகோ நிதி அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
19 Oct 2024மெக்சிகோ சிட்டி : அரசு முறை பயணமாக மெக்சிகோ சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு நிதியமைச்சர் ரமிர்ஸ் டி லா ஒ-வை சந்தித்து பேசினார்.