எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத சம்பவங்களில் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலும் ஒன்று. அந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 பயங்கரவாதிகள், நகரின் முக்கிய பகுதிகளில் வெறியாட்டம் போட்டனர். இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையை சுமார் 60 மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர்கள் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கண்ணில் கண்ட அப்பாவிகளை கொன்று குவித்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த இந்த பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 238 பேர் காயமடைந்தனர்.
ரெயில் நிலையம், ஆடம்பர ஓட்டல்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடந்த இந்த தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த கொடிய சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர்களையும் இந்தியாவின் விசாரணை அமைப்புகள் கண்டுபிடித்தன.அதன்படி பாகிஸ்தான் வம்சாவளியும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவூத் கிலானி மற்றும் அவனது கூட்டாளியான பாகிஸ்தானில் பிறந்த கனடா தொழில் அதிபர் தஹாவூர் ராணா (வயது 64) ஆகிய இருவரும் இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு மூளையாக இருந்தது தெரியவந்தது.
இதில் ஹெட்லி 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் பிடிபட்டார். அங்கும் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர், அமெரிக்காவிலேயே சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.அதே ஆண்டில் தஹாவூர் ராணாவும் அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கியிருந்தார். பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்ததால் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்தது. இதற்கும் பலனும் கிடைத்தது. நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ராணா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வர உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமெரிக்கா விரைந்தது. பின்னர் ராணாவை அழைத்து வருவதற்கான நடைமுறைகளை அங்கே மேற்கொண்டது.
இந்த நடைமுறைகளை முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் ராணாவை இந்தியா அழைத்து வந்தனர். இந்த விமானம் டெல்லியில் நேற்று முன்தினம் தரையிறங்கியது. டெல்லி வந்தடைந்ததும் அவரை முறைப்படி என்.ஐ.ஏ போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு என்.ஐ.ஏ. கோர்ட் சிறப்பு நீதிபதி முன் ராணாவை ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ. போலீசார் 20 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து ராணாவிடம் என்.ஐ.ஏ.போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
வீடு, வாகனங்கள் கடன் வட்டியை குறைக்க வங்கிகள் நடவடிக்கை
12 Apr 2025மும்பை : ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன.
-
தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை கடந்தது
12 Apr 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனையானது.
-
தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Apr 2025சென்னை : பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
-
சூடான்: துணை ராணுவம் தாக்குதல் 32 பேர் பலி
12 Apr 2025தர்பூர் : வடக்கு தர்பூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று முன்தினம் ராபிட் சப்போர்ட் போர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-04-2025
12 Apr 2025 -
முரண்பாடுகளின் மொத்த உருவம் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
12 Apr 2025சென்னை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்பது முரண்பாடுகளி்ன் மொத்த உருவம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
-
தேசிய கூட்டணியில் தான் உள்ளோம்: டி.டி.வி. தினகரன் தகவல்
12 Apr 2025சென்னை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.
-
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு : 145 பில்லியன் டாலரை எட்டும்: நிதி ஆயோக்
12 Apr 2025புதுடில்லி : இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலரை எட்டும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க.-வுக்கே வெற்றி: விஜய்
12 Apr 2025சென்னை, 2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி.
-
மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
12 Apr 2025புதுடெல்லி : மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
12 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
அமெரிக்காவின் வரி கொள்கையால் உலக நாடுகள் உற்சாகம்: அதிபர் ட்ரம்ப்
12 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள
-
தமிழ்நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வோம்: பிரதமர் மோடி
12 Apr 2025புதுடில்லி : தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
-
பொன்முடிக்கு இ.பி.எஸ். கடும் கண்டனம்: அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு
12 Apr 2025சென்னை : பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை, சைதாப்பேட்டை
-
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
12 Apr 2025புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக
-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாகாது: அமைச்சர் சிவசங்கர்
12 Apr 2025கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் அவசர கதியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
12 Apr 2025புதுடெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்த
-
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 Apr 2025கொடைக்கானல் : தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
12 Apr 2025தருமபுரி : கர்நாடகா காவிரியில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
-
ஜார்க்கண்ட்டில் சோகம்: குளத்தில் மூழ்கி 4 பெண்கள் பலி
12 Apr 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட்டில் குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 4 பெண் கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜூன் முதல் வாரத்தில் மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
12 Apr 2025சென்னை, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.
-
கோவையில் த.வெ.க.வின் முதல் பூத் கமிட்டி மாநாடு?
12 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
12 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல்.
-
மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சி.எஸ்.கே.: முன்னாள் ஆஸி. கேப்டன்
12 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் நம்பிக்கையின்றி விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
-
ரொட்டியை ரோட்டில் வீசி அவமதிப்பதை ஏற்க முடியாது: டெல்லி முதல்வர் ரேகா
12 Apr 2025புதுடெல்லி, ரொட்டியை தூக்கி வீசி அவமதிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.