முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கடல் மட்டத்துக்கும் கீழே...

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல, கேரளத்தின் நெற்களஞ்சியமாக உள்ள குட்டநாட்டில், அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கின்றன. ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த குட்டநாடு, கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி இதுவே. ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் இங்கு, நெல், வாழை ஆகியன முதன்மையாக பயிரிடப்படுகின்றன. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

பூமிக்கும் வந்து விட்டது கருப்பு பெட்டி

அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள  இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

தூக்கமின்மை

பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.

கொடிய உயிர் கொல்லியான எயிட்ஸ்க்கு எதிராக தகவமைத்து கொண்ட மனித உடல்

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு  ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.  இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நாசா அபாரம்

கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி மையம் புதிய கோள்களை கண்டறிந்துள்ளது. ஒன்று இரண்டல்ல. நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளனர். ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும் கூடுதல் சிறப்பு.

தக்காளியின் மகிமை

வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி அன்றாட உணவில் பயன்படுத்தும் தக்காளிக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இந்த திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago