எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன. செஸ் ஒலிம்பியாட்டின் 9ஆவது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தன. இந்திய ஆடவர் அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இதில் 2-2 என டிராவில் முடிந்தது. கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில் அமெரிக்காவுடன் 2-2 என டிரா செய்தது. 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் மகளிர் அணி 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் ஓபன் பிரிவில் ஆடவர் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 10ஆவது சுற்றில் ஆடவர் அணி அமெரிக்காவுடனும் மகளிரி பிரிவில் சீனாவுடனும் மோதுகிறது. மீதமிருக்கும் 2 சுற்றுகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தங்கத்தை வெல்லாம்.
______________________________________________________________________________
வங்கதேச வீரர் ரஹீம் சாதனை
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 376 ரன்கள் அடித்ததுஇதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 287 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வங்கதேச அணியின் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த இன்னிங்சில் ரஹீம் 6 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 15,201 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்னர் அந்த அணிக்காக தமிம் இக்பால் 15192 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தியுள்ள ரஹீம் புதிய சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல் வருமாறு., 1. முஷ்பிகுர் ரஹீம் - 15,201 ரன்கள், 2.தமிம் இக்பால் - 15,192 ரன்கள், 3. ஷகிப் அல் ஹசன் - 14,696 ரன்கள், 4.மக்மதுல்லா - 10,694 ரன்கள்.
______________________________________________________________________________
ஆப்கான் வீரர் ரஷித்கான் சாதனை
ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 105 ரன்கள் அடித்தார். இதனையடுத்து 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா வெறும் 134 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முன்னதாக ரஷித் கானுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் அதிகபட்ச விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் வருமாறு, 1. ரஷித் கான் - 5 விக்கெட்டுகள், 2. பிலாண்டர்/பிராட் - 4 விக்கெட்டுகள்.
______________________________________________________________________________
தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்களுக்குள் சுருட்டி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்தார். அஜ்மதுல்லா 86 ரன்களும் ரஹ்மத் 50 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 34.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெம்பா பவுமா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார். 9 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 39 பந்துகளில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்க அணி தனது மோசன்மான கிரிக்கெட்டினை விளையாடி வருகிறது.
______________________________________________________________________________
ஜடேஜா மீது பொறாமை: அஸ்வின்
ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர்.
ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்து எப்போதும் பொறாமைப்படுவதாக அவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார். ரவீந்திர ஜடேஜா குறித்து அஸ்வின் பேசியதாவது: ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்து எப்போதும் பொறாமைப் படுகிறேன். அவர் மிகவும் திறமையானவர். அவரது திறன்களை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். நான் அவராக இருக்க ஆசைப்படுவேன். ஆனால், நான் நானாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் நன்றாக செயல்படுவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் செய்வதைப் பார்த்து, நாம் எவ்வாறு சிறப்பாக பேட் செய்யலாம் என யோசித்துள்ளேன். பந்துவீச்சை பொறுத்தவரையில், அவர் மிகவும் எளிமையாக செயல்படுவார். நாங்கள் இருவரும் பந்துவீச்சில் ஒன்றாக வளர்ந்து வந்தோம். இருவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எனது வெற்றியை அவரும், அவரது வெற்றியை நானும் கொண்டாடுகிறோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 days 6 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 11 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 3 days ago |
-
திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் : 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என பேட்டி
21 Sep 2024திருச்செந்தூர் : மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2024.
21 Sep 2024 -
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை
21 Sep 2024சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இலங்கையின் புதிய அதிபர் யார்? - இன்று தேர்தல் முடிவுகள் வெளியீடு
21 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
21 Sep 2024சென்னை : குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
21 Sep 2024திருமலை : திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
கொல்கத்தாவில் 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்
21 Sep 2024கொல்கத்தா : கடந்த 42 நாட்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்கள் நேற்று பணிக்கு திரும்பினர்.
-
கோவையில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
21 Sep 2024கோவை : கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
21 Sep 2024புதுடெல்லி : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
-
முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
21 Sep 2024தஞ்சாவூர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
21 Sep 2024திருப்பதி : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்
-
மோடியைக்கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது: அமித்ஷா பேச்சு
21 Sep 2024ஸ்ரீநகர் : மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்
-
டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
21 Sep 2024புதுடெல்லி, டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
-
உணவு பாதுகாப்பு குறியீட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கேரள மாநிலம் முதலிடம் : தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது
21 Sep 2024திருவனந்தபுரம் : உணவு பாதுகாப்பு குறியீட்டில் கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் : சென்னை பூந்தமல்லி கோர்ட் உத்தரவு
21 Sep 2024சென்னை : பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
21 Sep 2024ஜெருசலேம் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தள
-
புதிய உச்சத்தை தொட்ட ஒரு பவுன் தங்கம் விலை
21 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்
-
நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த ஆந்திர மாநில அரசு
21 Sep 2024ஐதராபாத் : மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய விமானப்படை தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்
21 Sep 2024புதுடெல்லி : இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 30-ம் தேதி அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.
-
ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளையா? - விசாரணைக்கு உள்ளான கேரள நபர்
21 Sep 2024சோபியா : ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறிய ரின்சன் ஜோஸ் என்பவரை பல்கேரிய போலீசார் தங்களது விசாரணை வள
-
ஊடகங்கள் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறி விட்டன : கேரள முதல்வர் பினராய் விஜயன் சாடல்
21 Sep 2024திருவனந்தபுரம் : ஊடகங்களில் சில பகுதியினர் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளனர் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் சாடியுள்ளார்.
-
19 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி விடுவிப்பு
21 Sep 2024ஜகார்த்தா : கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்கு பின் நேற்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-
பெண் ஊழியர்களுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை : கர்நாடக மாநில அரசு திட்டம்
21 Sep 2024பெங்களூரு : அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 
-
சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று ரத்து
21 Sep 2024சென்னை : சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக வெற்றிக்கழக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படம் மாற்றம்
21 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படம் மாற்றப்பட்டுள்ளது