முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாம்பரத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
Jail

Source: provided

சென்னை : தாம்பரம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

சென்னை அருகே, தாம்பரம் மாநகர போலீசாருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் பேரில், தாம்பரம் சங்கர்நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் (10-4-2025) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பலநாயுடு என்ற நபரை சோதனை செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நபரிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்பலநாயுடு, ஒடிசாவிலிருந்து ஆந்திரா வழியாக கஞ்சாவை அனங்கப்பள்ளி மாவட்டம் நரசிம்மபட்டியைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளான ரகுமான், துர்கா ஆகியோரின் உதவியுடன் வாங்கி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சாவை கொண்டுவர அப்பலநாயுடுவுக்கு உதவிய ரகுமான், துர்கா ஆகிய இருவரையும் கைது செய்ய தாம்பரம் மாநகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து