எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
ஆண்டுதோறும் சட்ட சபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கும். இந்த வருடம் தாமதமாக பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த ஆண்டின் தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று (2-ம் தேதி) தொடங்குகிறது. கொரோனா காரணமாக இந்த கூட்டம் சட்டமன்ற கூடத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக கலைவாணர் அரங்கின் 3-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடந்த மழைகால சட்டமன்ற கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக இங்கு நடத்தப்பட்டது. இந்த வருட முதல் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கில் அதே இடத்தில் நடத்தப்படுகிறது.
கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைத்து எம்.எல்.ஏ.க் கள், கூட்டமன்ற செயல் அதிகாரிகள், செய்தி சேகரிக்கும் ஊடகத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஊரில் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவை கொண்டு வரலாம். அல்லது எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடைபெறுவதையொட்டி சபாநாயகர் தனபால், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து சட்டசபை கூட்டத்துக்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். முன்னதாக கலைவாணர் அரங்குக்கு வரும் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கவர்னர் உரையில் அரசின் முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும். பல்வேறு புதிய திட்டங்களுக்கான முன் அறிவிப்புகளும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அதன் மொழி பெயர்ப்பை சபாநாயகர் தனபால் தமிழில் வாசிப்பார். இத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவுபெறும். அமைச்சர் துரைக்கண்ணு சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3-ம் தேதி ஒருநாள் சட்ட சபை கூட்டம் ஒத்தி வைக்கப்படலாம். இதுபற்றிய முடிவை சபாநாயகர் அறிவிப்பார்.
தொடர்ந்து நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கார சார விவாதங்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இது சட்டசபையிலும் எதிரொலிக் கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். எனவே, இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதை எதிர்க்கட்சிகள் வற்புறுத்தும் என்று தெரிகிறது. இன்று சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதில் இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்று தொடங்கும் சட்டசபை முதல் கூட்டத்தொடர் 2 அல்லது 3 நாட்கள் நடை பெறலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
20 Oct 2024சென்னை : தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் நேர்ந்த தவறுக்கு கவனச் சிதறலே காரணம் என தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக
-
ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் ஜனாதிபதி முர்மு
20 Oct 2024புதுடெல்லி : ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
-
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: 4 பேர் கைது
20 Oct 2024திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய டாக்டர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட ஏதுவாக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
-
காசாவில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: மருத்துவர்கள் உட்பட 73 பேர் பலி
20 Oct 2024ஜெருசலேம் : வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர்.
-
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
-
செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி : த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை
20 Oct 2024சென்னை : அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 101 வயது : தலைவர்கள் வாழ்த்து
20 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவின் முன்னாள் முதல்வர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் வி.எஸ்.
-
இந்தியை திணிக்க யாரும் முயற்சி செய்யவில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
20 Oct 2024சென்னை : இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை.
-
ஈரான் மீது தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்: அமெரிக்க உளவுத்துறையில் கசிந்த ஆவணங்கள்
20 Oct 2024வாஷிங்டன் : ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத் துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
-
தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு : எலான் மஸ்க் அறிவிப்பு
20 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை எலான் மஸ்க் துவக்கி உள்ளார்.
-
அந்தமான் அருகே 23-ம் தேதி உருவாகிறது டானா புயல் : தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தகவல்
20 Oct 2024சென்னை : அந்தமான் அருகே வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
டெல்லியில் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்
20 Oct 2024புதுடெல்லி : டெல்லி ரோகினி பகுதியில் சி.ஆர்.பி.எப்.
-
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும் : பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா உறுதி
20 Oct 2024கோழிக்கோடு : வயநாடு லோக்சபா தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ப
-
190 போா்க் கைதிகளை பரிமாறி கொண்ட ரஷ்யா - உக்ரைன்
20 Oct 2024மாஸ்கொ : ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இருதரப்பில் இருந்தும் 190 போர்க் கைதிகள் விடு
-
சேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
20 Oct 2024சேலம் : சேலம் அருகே ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நெல்லை நீட் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவில் முகாம்
20 Oct 2024திருவனந்தபுரம் : நீட் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது
-
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி: உதயநிதி ஸ்டாலின்
20 Oct 2024சேலம் : விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  
-
மகராஷ்டிர சட்டசபை தேர்தல் அட்டவணையில் பா.ஜ.க.வின் சதி : சஞ்சய்ராவத் குற்றச்சாட்டு
20 Oct 2024மும்பை : இந்திய தேர்தல் ஆணையத்தின் மகராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது.
-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய அரசு முடிவு?
20 Oct 2024சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
திருச்சானூரில் நவம்பர் 28-ல் பிரம்மோற்சவம் ஆரம்பம் : தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்
20 Oct 2024திருப்பதி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நவம்பர் 28-ம் தேதி தொடங்க உள்ளது.
-
தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும்: தமிழிசை பேட்டி
20 Oct 2024சென்னை : தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
காஷ்மீரில் மாரத்தான் போட்டி: பயிற்சி ஏதுமின்றி 21 கி.மீ. ஓடி சாதனை படைத்த முதல்வர் உமர் அப்துல்லா
20 Oct 2024ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த மாரத்தான் போட்டியில் பயிற்சி ஏதுமின்றி அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா 21 கி.மீ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-10-2024
20 Oct 2024 -
ராஜஸ்தானில் நிகழ்ந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி
20 Oct 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் பஸ்சும், டெம்போவும் மோதிக் கொண்ட விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.