எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தரப்பில் பந்துவீச்சில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டும், பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்னும் அடித்தனர். இந்நிலையில், ரோகித்துக்கு பின் சஞ்சு சாம்சனை இந்திய டி20 அணியின் கேப்டனாக வளர்த்தெடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் பார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்பதற்கான சான்று. ஜெய்ஸ்வால் மற்றும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வேண்டும். ரோகித்துக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளாதா...? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் மீண்டும் கான்வே?
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த டெவான் கான்வே காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சி.எஸ்.கே அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இன்னும் சில நாட்களில் அணியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அவரது இடத்தை நிரப்ப ரிச்சர்ட் கிலீசன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டெவான் கான்வே மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு டெவான் கான்வேவை தயார் செய்யும் பொறுப்பை சி.எஸ்.கே நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது காயத்தை குணப்படுத்தி மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உடற்தகுதியை மீட்க பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.
நன்றி தெரிவித்த ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்று ஆரம்பம் முதலே நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பந்தை சரியாக பார்த்து என்னுடைய ஷாட்டுகளை அடிப்பதில் உறுதியாக இருந்தேன். இதுவரை என்ன செய்தேனோ அதை தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். அதை தவிர்த்து என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை.
கடினமான நேரத்தில் என்னை வழி நடத்திய விதத்திற்காக என்னுடைய சீனியர்களுக்கு உண்மையாக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக சங்கா சார், சஞ்சு பாய் ஆகியோர் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தனர். அதை பயன்படுத்தி வலைப்பயிற்சியிலும் களத்திலும் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
திட்டம் குறித்து சந்தீப் சர்மா
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நேற்று முன் தினம் தான் பிட்டானேன். பிட்டான பின் விளையாடிய முதல் போட்டி நல்ல உணர்வை கொடுக்கிறது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. எனவே தொடர்ந்து வேரியஷன்களை மாற்றி கட்டர்களை வீசுவோம் என்பதே என்னுடைய திட்டமாகும்.
கடைசிக்கட்ட ஓவர்களில் நீங்கள் பந்து வீசுகிறீர்கள் என்றால் உங்களுக்கு பெரிய மனம் வேண்டும். ஐ.பி.எல் தொடரில் பல வீரர்கள் அந்த நேரத்தில் அழுத்தத்தை சந்தித்ததை பார்த்துள்ளேன். எனவே அங்கே அசத்துவதற்கு நீங்கள் பெரிய மனதுடன் திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன் நான் விலை போகவில்லை என்பது உங்களுக்கு தெரியும். இப்போதும் நான் மாற்று வீரராக வந்துள்ளேன். எனவே ஒவ்வொரு போட்டியையும் போனஸ் போல மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாண்ட்யா குறித்து அதிருப்தி
நடப்பு ஐ.பி.எல் தொடரில் பாண்ட்யா தலைமையில் ஆடி வரும் மும்பை அணி இதுவரை 8 லீக் ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி பேட்டிங் செய்த போது இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா நல்ல பினிஷிங் கொடுக்கத் தவறியதால் கடைசியில் எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்காதது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமானது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு கட்டத்தில் தோனிக்கு பின் இந்தியாவின் சிறந்த பினிஷர் என்று பாராட்டப்பட்ட ஹர்திக் பாண்ட்யா காயத்தை சந்தித்ததிலிருந்தே சமீப காலங்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார்.
இந்நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் திறமை பாண்ட்யாவிடம் குறைந்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஹர்திக் பாண்டியாவின் அடிக்கும் திறமை கீழே சென்று கொண்டிருக்கிறது. பெரிய கண்ணோட்டத்தில் மிகப்பெரிய கவலைக்குரிய அம்சமாகும். வான்கடே மைதானத்தில் அவர் வித்தியாசமாக செயல்படுகிறார். ஆனால் சிறிய உதவி இல்லாத பிட்ச்கள் அவருக்கு கவலையாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 11 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு:46 ரன்களுக்கு ஆல்அவுடாகி இந்தியா மோசமான சாதனை
17 Oct 2024பெங்களூரு: நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்திய அமி ஆல்அவுடாகி மோசமான சாதனை படைத்துள்ளது.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
17 Oct 2024சென்னை, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Oct 2024சென்னை, மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
17 Oct 2024சென்னை, உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வின் முடிவுகள் இன்று 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
வடிகால் பணிகளை அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Oct 2024சென்னை, மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க. அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் மழைநீர் தேங்கி இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ரூ.1,500 கோடியில் நவீனமயமாகும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை: இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு
17 Oct 2024சென்னை, சென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
-
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பரிந்துரை
17 Oct 2024புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
-
மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
17 Oct 2024சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க மு
-
சுடச்சுட பிரியாணி பரிமாறி தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
17 Oct 2024சென்னை, கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டு மகிழ்ந்தார்.
-
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு: ஆதாரங்கள் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புதல்
17 Oct 2024ஒட்டாவா, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
-
டிரம்புக்கு 70 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த எலான் மஸ்க்
17 Oct 2024வாஷிங்டன், டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலான் மஸ்க் 70 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
-
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து
17 Oct 2024சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5-ஏ தேர்வு அறிவிப்பு
17 Oct 2024சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு
17 Oct 2024சேலம், காவிரி நீர்ப்பிடிப்பு பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
அசாமில் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் சட்ட பிரிவு செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
17 Oct 2024புது டெல்லி, அசாமில் ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971 வரை புலம்பெயர்ந்து குடியேறியவர்களுக்கு அம்மாநில குடியுரிமையை உறுதி செய்யும் இந்திய குடியுரிமைச் சட்டப் பிரிவு 6
-
திருப்பதி கோவிலில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை வெளியீடு
17 Oct 2024திருமலை, திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை 19-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ள
-
பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
17 Oct 2024சென்னை, பருவ மழை காலங்களில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு
17 Oct 2024சென்னை; 2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசா
-
புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
17 Oct 2024ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.
-
அம்மா உணவகங்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு தகவல்
17 Oct 2024சென்னை, மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது,
-
ஜஸ்டின் ட்ரூடோவின் செயலால் இந்தியா-கனடா உறவில் பாதிப்பு மத்திய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
17 Oct 2024புதுடெல்லி: இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
-
2024 மிஸ் இந்தியாவாக நிகிதா போர்வால் தேர்வு
17 Oct 2024மும்பை: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் மிஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றார்.
-
கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
17 Oct 2024புது டெல்லி, கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்: அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை
17 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம்
17 Oct 2024மும்பை, ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.