முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      தமிழகம்
Anbil 2

சென்னை, பருவ மழை காலங்களில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். 

பருவமழை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

 அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நேற்று, தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு மருத்துவ உதவிகள், கட்டடங்களின் உறுதித் தன்மை உள்ளிட்ட தலைப்புகளில் ஆலோசனை வழங்கினார். மேலும், பருவமழையின் போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உறுதிபடுத்தவும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பருவமழை காலங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து