முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      இந்தியா
Modi1-2024-10-17

புது டெல்லி, கருணை மற்றும்  நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லி விஞ்ஞான் பவனில், பாலியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான திறவுகோல் இரக்கமும் நல்லெண்ணமும் தான். கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும். பாலி மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது. இது புத்தரின் மரபுக்கு கிடைத்த கவுரவம்.

புத்த பெருமானை பின்பற்றும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று புனிதமான நாள். பாலி மொழியை வாழ வைப்பதும், புத்த பெருமானின் வார்த்தைகளை உயிர்ப்பிப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும். 

இந்த பொறுப்பை எங்கள் அரசாங்கம் மிகவும் பணிவுடன் நிறைவேற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புத்தரின் போதனைகள் மனித குலத்தின் நலனுக்கான அசைக்க முடியாத உறுதியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து