எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Ladak 2024-06-29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/29/Ladak_2024-06-29.jpg?itok=cPKf9jig)
Source: provided
புதுடெல்லி : லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும்போது நேரிட்ட விபத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய வருத்தத்தை அளித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கி.மீ. தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நேற்று அதிகாலை டேங்கர் மூலம் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
துணிச்சலான வீரர்கள் நமது தேசத்துக்கு அளித்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். துயரமான இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
லடாக்கில் ராணுவத்தின் டேங்க், ஆற்றைக் கடக்கும்போது டேங்க்கில் இருந்த இளநிலை ஆணைய அதிகாரி உட்பட துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கமான இந்த நேரத்தில், நமது வீரம் மிக்க ராணுவ வீரர்களின் முன்மாதிரியான சேவைக்கு தேசம் ஒன்று சேர்ந்து வணக்கம் செலுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 1 min 58 sec ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 4 days 3 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 6 days 23 hours ago |
-
உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பயங்கரம்: வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி : விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
02 Jul 2024ஹாத்ரஸ் : உத்தரப்பிரதேசத்தில் வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பார்லி.யில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி பதிலுரை : என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி வலுவாக உள்ளது - ஒட்டுன்ணி கட்சி காங்கிரஸ் என தாக்கு
02 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி நேற்று பதிலளித்து ப
-
2026 டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி நேரடியாக தகுதி : மேலும் 19 அணிகளும் பங்கேற்பு
02 Jul 2024துபாய் : 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்திய அணி நேரடியாக தகுதிப்பெற்றுள்ளது.
-
வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பும் இந்திய அணி
02 Jul 2024பார்படாஸ் : டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்புகிறது.
-
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Jul 2024சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-07-2024.
03 Jul 2024 -
நீட் முறைகேடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 8-ம் தேதி முக்கிய விசாரணை
02 Jul 2024புதுடெல்லி : நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு விசாரிக்க உள்ளது.
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி: தமிழக வீரர் உள்ளிட்ட 3 பேருக்கு இடம்
02 Jul 2024மும்பை : இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன.
-
அனைவருக்கும் நன்றி: பிரியாவிடை பெற்றார் பயிற்சியாளர் டிராவிட்
02 Jul 2024BOX - 1 உள்ளது...
-
முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Jul 2024புதுடெல்லி : தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விடவும் ஆறு நாள்கள் முன்னதாக, நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சாதனை படைத்த 2024 - டி-20 உலகக்கோப்பை
02 Jul 20242024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது.
-
வாக்கு இயந்திரம் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை: அகிலேஷ் பேச்சு
02 Jul 2024புதுடெல்லி : உ.பி.யில் 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் நம்பகத்தன்மை மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஸ் சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
03 Jul 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஸ் சிசோடியா மற்றும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான காவிதாவின் நீதிம
-
சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் : கோட்டூர்புரம் போலீசார் விசாரணை
03 Jul 2024சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.
-
தமிழகத்திற்கு கிருஷ்ணா நீரை திறக்க ஆந்திர அரசு நிபந்தனை
03 Jul 2024சென்னை : கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டண நிலுவைத்தொகை, 129 கோடி ரூபாயை விடுவித்தால், தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆந்திர அரசு கூறி
-
மம்தாவுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைப்பு
03 Jul 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இடைவிடாது பெய்யும் கனமழை: மணிப்பூரில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை
03 Jul 2024இம்பால், மணிப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வு தேவையில்லை: மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
03 Jul 2024சென்னை : நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு
03 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
-
இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண ரேவந்த் ரெட்டிக்கு சந்திரபாபு அழைப்பு
03 Jul 2024அமராவதி : இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
-
சபரிமலை கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம்
03 Jul 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஹத்ராஸ் சம்பவம்: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து உ.பி. முதல்வர் நலம் விசாரிப்பு
03 Jul 2024லக்னோ : ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உ.பி.
-
தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
03 Jul 2024சென்னை : தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
03 Jul 2024சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நேற்று தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் : வரும் 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
03 Jul 2024சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.