எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Ladak 2024-06-29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/29/Ladak_2024-06-29_0.jpg?itok=oV1pvw5k)
லே, லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஆற்றை கடக்கும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை மாலை தௌலத் பேக் ஓல்டி பகுதியில் ராணுவ டேங்க் விபத்துக்குள்ளானதில் ஒரு இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உட்பட ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர். ஐந்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது., எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே தௌலத் பேக் ஓல்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை டி-72 ரக ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் ராணுவ டேங்கர் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கரில் இருந்த இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரின் உடல் உடனே மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வீரர்களின் உடல்களும் சனிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது வீரர்கள் 5 பேர் உயிரிழந்தது வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்த துயர நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 6 hours 1 min ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 4 days 9 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-07-2024.
03 Jul 2024 -
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு
03 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
-
சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் : கோட்டூர்புரம் போலீசார் விசாரணை
03 Jul 2024சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஸ் சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
03 Jul 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஸ் சிசோடியா மற்றும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான காவிதாவின் நீதிம
-
தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
03 Jul 2024சென்னை : தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு கிருஷ்ணா நீரை திறக்க ஆந்திர அரசு நிபந்தனை
03 Jul 2024சென்னை : கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டண நிலுவைத்தொகை, 129 கோடி ரூபாயை விடுவித்தால், தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆந்திர அரசு கூறி
-
மம்தாவுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைப்பு
03 Jul 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண ரேவந்த் ரெட்டிக்கு சந்திரபாபு அழைப்பு
03 Jul 2024அமராவதி : இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
-
இடைவிடாது பெய்யும் கனமழை: மணிப்பூரில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை
03 Jul 2024இம்பால், மணிப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
யூரோ கோப்பை போட்டி: ரொனால்டோ முக்கிய தகவல்
03 Jul 2024ரோம் : உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார்.
-
நீட் தேர்வு தேவையில்லை: மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
03 Jul 2024சென்னை : நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
-
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
03 Jul 2024சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நேற்று தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
லோக்சபா கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது : சபாநாயகர் ஓம் பிர்லா பெருமிதம்
03 Jul 2024புதுடில்லி : 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் 103 சதவீதம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
-
உ.பி. நெரிசல் சம்பவ உயிரிழப்பு எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு : போலே பாபா தலைமறைவு
03 Jul 2024புதுடெல்லி : உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு : ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
03 Jul 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது.
-
விக்கிரவாண்டி தொகுதியில் 3 நாட்கள் அமைச்சர் உதயநிதி தீவிர பிரச்சாரம்
03 Jul 2024சென்னை : இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 6,7,8 தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தி.மு.க.
-
கோவை, நெல்லை மாநகராட்சியின் தி.மு.க.மேயர்கள் திடீர் ராஜினாமா
03 Jul 2024கோவை : ஒரே நாளில் தி.மு.க.வை சேர்ந்த கோவை மற்றும் நெல்லை மாநகராட்சியின் மேயர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
-
போதைப்பொருள் கடத்தும் இடமாகி விட்டதா சிறைச்சாலை? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
03 Jul 2024சென்னை : தமிழக சிறைச்சாலைகள், தற்போது பாதுகாப்பாக போதைப்பொருட்கள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறி விட்டதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
-
ஹத்ராஸ் சம்பவம்: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து உ.பி. முதல்வர் நலம் விசாரிப்பு
03 Jul 2024லக்னோ : ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உ.பி.
-
நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
03 Jul 2024சென்னை : நீட் தேர்வுக்கு எதிரான இன்றைய ஆர்ப்பாட்டங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
யானைகளுக்கான உணவகம் ஒடிசா சரணாலயத்தில் திறப்பு
03 Jul 2024புவனேஸ்வர், ஒடிசாவில் சந்தகா வனவிலங்கு சரணலாயத்தில் யானைகளுக்கான உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலை கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம்
03 Jul 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து : சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
03 Jul 2024சென்னை : பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அ.தி.மு.க.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: கஜகஸ்தான் சென்றடைந்த அதிபர்கள் புடின், ஜி ஜின்பிங்
03 Jul 2024அஸ்டானா, கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் நேற்று முதல் 2 நாட்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது.
-
காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல் பாலஸ்தீனர்கள் 12 பேர் பலி
03 Jul 2024காசா, மத்திய காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.