எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Patthiram 2023-09-06](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/01/Patthiram_2023-09-06.jpg?itok=A2OCxZZS)
Source: provided
சென்னை : பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன.
எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர்.
அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஆனால் புதிதாக மதிப்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் ஜூன் 10-ம் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.
இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை ஜூலை 1-ம் தேதி திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது.
அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று முன்தினம் இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன. அதன் காரணமாக அந்த இணையதளம் https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று (நேற்று) முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 1 min 15 sec ago |
புரோட்டீன் லட்டு![]() 2 days 20 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 2 min ago |
-
நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்: நீட் தேர்வு முழுவதையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
05 Jul 2024புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது எப்படி? தொகையை மறுபரிசீலிக்க முடியுமா என ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Jul 2024சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760-க்கும் சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை சற்று உயர்ந்தது.
-
2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 11-ல் முதுநிலை ‘நீட்’ தேர்வு நடைபெறும்: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
05 Jul 2024புதுடெல்லி, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
மர்மநபர்கள் வெறிச்செயல்: சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை
05 Jul 2024சென்னை : சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
-
பிரிட்டன் பார்லி. உறுப்பினரான உமா குமரனுக்கு முதல்வர் வாழ்த்து
05 Jul 2024சென்னை : தமிழர்களுக்கு தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள்” என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்ணான உமா குமரனுக்கு தமிழக முதல்வர் ம
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து: தொகுதி வாரியாக ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்
05 Jul 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் முடிவுள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்
05 Jul 2024சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித
-
ஆகஸ்ட்டில் மத்திய அரசு கவிழலாம்: லல்லு பிரசாத்
05 Jul 2024பாட்னா : ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழலாம் என பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.யின் ஜூன் மாத வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா
05 Jul 2024துபாய் : ஐ.சி.சி.யின் ஜூன் மாத வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா இடம்பிடித்துள்ளனர்.
-
ஒரு தலைமுறைக்கான வீரர்: பும்ராவுக்கு கோலி புகழாரம்
05 Jul 2024மும்பை : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர் என அவருடன் இணைந்து விளையாடும் இந்தியாவின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி பாராளுமன்றக்குழு தலைவராக சஞ்சய்சிங் நியமனம்
05 Jul 2024புதுடெல்லி : ஆம் ஆத்மியின் பாராளுமன்றக்குழு தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பார்லி. தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் : ரிஷி சுனக் அறிவிப்பு
05 Jul 2024லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி.
-
நன்றி தெரிவித்த கோலி
05 Jul 202420 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
-
2024 டி20 உலகக்கோப்பையை ஒரு கேப்டனாக வென்றது மிக சிறப்பானது: ரோகித்
05 Jul 2024மும்பை : 2024 டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றது மிகவும் சிறப்பானது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
காவிக்கு பதில் இனி மஞ்சள்: அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை
05 Jul 2024லக்னோ : அயோத்தி ராமர் கோயிலில், அர்ச்சகர்கள் அனைவரும் காவி நிறத்தில் மேலாடை, தலைப்பாகை, வேட்டி அணிந்திருந்தனர்.
-
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு துவக்கம்
05 Jul 2024சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Jul 2024மும்பை : உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
ரூ.125 கோடி பரிசு...
-
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
05 Jul 2024புதுடெல்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2024.
06 Jul 2024 -
பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை
06 Jul 2024லாகூர் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை யு டியூப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மங்கோலிய நாட்டின் பிரதமராக ஒயுன் எர்டீன் மீண்டும் தேர்வு
06 Jul 2024உலான்பாதர் : மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.
-
உக்ரைன் போர்: நேட்டோ நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
06 Jul 2024மாஸ்கோ : ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் உக்ரைன்போர் விரைவில் அணு ஆயுத போராக மாறி விடும் என நேட்டோ நாடுகளுக்கு அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பாராளுமன்றத்தில் வரும் 12-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர நேபாள பிரதமர் பிரசந்தா முடிவு
06 Jul 2024காத்மண்டு : நேபாள பிரதமர் பிரசந்தா வரும் 12-ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்து உள்ளார்.
-
ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி
06 Jul 2024டெக்ரான் : ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.