முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு விவகாரம்: பார்லி.யில் இன்று விவாதம் நடத்த வழிவகை செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

புதுடெல்லி : நீட் விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அது குறித்து இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர்  மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்தக் கடிதம் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். நீட் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று ஜூன் 28-ம் தேதி எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். 

இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தன. இந்த விவகாரம் குறித்து அரசுடன் விவாதிப்பதாக சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு உறுதியளித்தார்.

முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டறிய ஆக்கபூர்வமாக ஈடுபடுவதே எங்கள் நோக்கம். இந்த நேரத்தில், எங்களின் ஒரே கவலை இந்தியா முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 24 லட்சம் நீட் தேர்வர்களின் நலன் மட்டுமே. லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக மிகப் பெரிய தியாகங்களைச் செய்துள்ளன. 

வினாத்தாள் கசிவு என்பது பலரின் வாழ்நாள் கனவுக்கு இழைக்கப்பட்ட துரோகம். மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும், அவர்களின் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், இந்த பிரச்சினையைத் தீர்க்க தைரியமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நீட் தேர்வு விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், அது நமது உயர் கல்வி அமைப்பில் உள்ள ஆழமான கறையை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்து, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தேர்வுகளை ஒத்திவைப்பது, தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றுவது போன்ற அரசின் நடவடிக்கைகள், நமது ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு முகமையில் உள்ள சீர்குலைவை மறைக்கும் நடவடிக்கையாகும்.  மாணவர்கள் பதில்களைப் பெற தகுதியானவர்கள். அவர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மீட்டெடுப்பதற்கும் பாராளுமன்ற விவாதம் முதல் படியாகும். 

இந்த விவகாரத்தின் அவசரம் கருதி, இன்று (புதன்கிழமை) அவையில் விவாதம் நடத்துவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் நலன் கருதி நீங்கள் இந்த விவாதத்தை நடத்தினால் அது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து