முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      தமிழகம்
Exam (2)

Source: provided

சென்னை : சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியானது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலி இடங்களுக்கு தகுதியானவர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் இந்த பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி, நடப்பாண்டில் மொத்தம் 1,056 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி யு.பி.எஸ்.சி. வெளியிட்டது. நாடு முழுவதும் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக சொல்லப்பட்டது. முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 16-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

அந்த வகையில், முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி நாடு முழுவதும் 79 நகரங்களிலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களிலும் நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.

தேர்வு முடிந்து 14 நாட்கள் கடந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுதிய தேர்வர்கள் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேர்ச்சி பெற்றுள்ளதை தெரிந்து கொள்ளலாம் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2023) சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு, தேர்வு முடிந்த 16 நாட்களுக்கு பின் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு அதனைவிட முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு முடிவில் நாடு முழுவதும் எழுதியவர்களில், 14 ஆயிரத்து 627 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக, வெற்றி பெற்றவர்களின் பட்டியலையும் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இவர்களில் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 42 பேர் வெற்றி பெற்று இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி தெரிவித்தார்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு வருகிற செப்டம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்கள் விரைவில் யு.பி.எஸ்.சி. வெளியிட உள்ளது. அந்த தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து