எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![sellur-raj 2023 06 19](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/sellur-raj_2023_06_19.jpg?itok=yGasOzPb)
Source: provided
மதுரை : மதுரை பரவை பேரூராட்சிக்கு ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
அருகில் ஜெயந்திராஜூ, பரவை சேர்மன் கலாமீனாராஜா மற்றும் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், முன்னாள் சேர்மன் பரவைராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், நீதிகாந்த், பள்ளி ஆசிரியைகள், பரவை பேரூராட்சி அ.தி.மு.க.கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி உள்ளது. நான் பல்வேறு தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறேன். நான் விடுக்கும் கோரிக்கை செவிடன் காதில் ஊதும் சங்கை போல கிடப்பில் போடப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் திமுக தொகுதிகளுக்கு எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் செய்து தரவில்லை.சட்டமன்ற தொகுதி வாரியாக 10 நிலுவைத் திட்டங்கள் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதினோம்.
10 நிலுவை திட்டங்களில் 1 ஒரு திட்டத்தை கூட முதலமைச்சர் நிறைவேற்றி தரவில்லை.தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை செய்து தராமல் மக்களிடம் எம்எல்ஏக்களை திமுக அரசு பழிகாடாக மாற்றுகிறது. மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக்கூடிய அம்ருத் குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்தவொரு பயனும் இல்லை. தமிழக அரசிடம் பேசி திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் முன் வரவில்லை.
அ.தி.மு.க. 10 ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறவில்லை.கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை.கள்ளச்சாராய மரணங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முழு பொறுப்பு, கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை.கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56 படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார்.கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யலாமே சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் விதமாக கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம்.
நாங்கள் எங்களுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவில்லையே?, அரசு விற்பனை செய்யும் மதுபானத்தில் கிக்கு இல்லையே என அமைச்சர் துரைமுருகன் பேசியது அமைச்சருக்கு அழகில்லை, திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஆட்சி, போதை பொருள் ஆட்சி என கூறலாம்.
அரசு மதுபானங்கள் கொள்முதலில் வெளிப்படை தன்மைகளுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுப்போம்.பிரதமர் மோடி மணிப்பூருக்க ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே?, கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்திருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு, மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா?, சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க.வும் தனித்துப் போட்டியிடும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும் என கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 1 day 6 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 5 days 9 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 1 week 1 day ago |
-
ஹத்ராஸ் நகர் செல்ல ராகுல் காந்தி திட்டம் : காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
04 Jul 2024புது டெல்லி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த உ.பி.,யின் ஹாத்ராஸ் நகருக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக காங்கிரஸ் பொதுச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2024.
04 Jul 2024 -
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் உயிரிழப்பு
04 Jul 2024லாகூர், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் செனட் உறுப்பினர் இதயத்துல்லாகான் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
04 Jul 2024புதுச்சேரி, புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
04 Jul 2024புது டெல்லி, பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் உட்பட 9 பேர் கைது
04 Jul 2024சேலம், சேலம் அ.தி.மு.க. நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க.
-
ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு
04 Jul 2024சென்னை, ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்து
-
மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா: முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ம் தேதிதருமபுரி செல்கிறார்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Jul 2024தருமபுரி, மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 11-ம் தேதி தருமபுரி செல்கிறார்.
-
பிரதமர் மோடியை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சு: ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தல்
04 Jul 2024திருப்பதி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தி உள்ளார்.
-
மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி டுவிட்டர் பதிவு
04 Jul 2024சென்னை, மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
04 Jul 2024புது டெல்லி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
டெல்லி, அரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை: ஜெய்ராம் ரமேஷ்
04 Jul 2024புது டெல்லி, டெல்லி மற்றும் அரியானாவில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.&nbs
-
எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியை இரட்டிப்பாக்க ஒப்புதல்: சீன அமைச்சரை சந்தித்த பின் ஜெய்சங்கர் தகவல்
04 Jul 2024அஸ்தானா, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெள
-
நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2024சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் நேற்று வீடியோ காலில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், நீங்கள
-
அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கம்
04 Jul 2024புது டெல்லி, அக்னிவீரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
-
15 நாட்களில் 10-வது சம்பவம்: பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து
04 Jul 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் நேற்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
-
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் பா.ஜ.க. அமைச்சர்
04 Jul 2024ஜெய்ப்பூர், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜஸ்தானில் பா.ஜ.க.வை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரோடி லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன்: நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டம்
04 Jul 2024காத்மாண்டு, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போவதாக நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது
04 Jul 2024டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையான போரில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது.
-
மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள்: கோவையில் ஆசிய வங்கி அதிகாரிகள் கள ஆய்வு
04 Jul 2024கோவை, கோவையில் மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள் குறித்து ஆசிய வங்கி அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
-
பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
04 Jul 2024லண்டன், பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
-
வங்கதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்
04 Jul 2024டாக்கா, இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து பேசினா
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
04 Jul 2024சென்னை, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டுப்பாளையம் - கோவை இரட்டை இருப்புப் பாதை : ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை
04 Jul 2024புது டெல்லி, மேட்டுப்பாளையம் - கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்த
-
பிரிட்டன் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி
04 Jul 2024லண்டன்: பிரிட்டனில் நேற்ற நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டுள்ளனர்.