எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்பாலா, அக். 14 - டெல்லியில் கடந்த மாதம் 7 ம் தேதி ஐகோர்ட் முன்பு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் நடத்திய அந்த நாசவேலையில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் மீண்டும் நாசவேலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதனால் டெல்லியில் முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலில் அரியானா மாநிலம் அம்பாலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு நீல நிற காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளன. பெரிய நாசவேலைக்கு அவை பயன்படுத்தப்படவுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரகசிய தகவலை கேட்டதும் டெல்லி போலீசார் உஷாராகினர். உடனே இது குறித்து அரியானா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர்.
இதற்கிடையே வெடிகுண்டு கார் பற்றிய தகவல் அறிந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அம்பாலா நோக்கி விரைந்தனர். அவர்களும் அரியானா போலீசாரும் ஒருங்கிணைந்து சிறு சிறு குழுக்களாக அம்பாலா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வெளியில் பார்க்கிங் பகுதியில் உளவுத் துறை தெரிவித்த நீல நிற கார் இருப்பதை கண்டனர். எச். ஆர். 030054 என்ற எண் கொண்ட அந்த கார்தான் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மாலை 6.30 மணி முதல் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஆங்காங்கே நின்று காரை கண்காணித்தனர். காரை நிறுத்தி சென்ற தீவிரவாதிகள் மீண்டும் காரை எடுக்க வரும் போது கைது செய்யலாம் என்று காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு வரை யாருமே வரவில்லை. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த காரை கைப்பற்றினர். காரை திறந்து பார்த்த போது உள்ளே 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து, 5 டெட்டனேட்டர்கள், குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்யும் 2 டைமர்கள், 2 பேட்டரிகள் மற்றும் ஒரு காகித பொட்டலத்தில் ரசாயன கலவைகள் ஆகியவை இருந்தன.
அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் அவை தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. காரில் இருந்த வெடி பொருட்கள் மிகப் பெரிய நாசத்தை உண்டாக்க முடியும். அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க அந்த காரில் குண்டுகள் எடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் காரில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் குண்டு வடிவில் மாற்றப்படாமல் இருந்தது. மேலும் டெட்டனேட்டர், டைமர் இணைப்புடன் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. இதன் மூலம் அந்த வெடி பொருட்கள் அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க எடுத்து வரப்படவில்லை எனத் தெரிகிறது.
அந்த காரில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஒரு இனிப்பு கடையில் வாங்கிய பொட்டலம் இருந்தது. மேலும் வெடி பொருட்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கும் குறிப்புகளும், 2 காஷ்மீர் மாநில நாளிதழ்களும் இருந்தன. இதனால் டெல்லியை தகர்க்கும் நோக்கத்துடன் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களை தீவிரவாதிகள் அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த குண்டை வெடிக்க செய்து பெரிய நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அந்த கார் வந்ததற்கான அடையாளங்கள் தெரியவந்தன. இதையடுத்து அரியானா, பஞ்சாபில் உள்ள டோல்கேட்டுகளில் பொருத்தப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 6 பேர் அந்த காரில் வந்ததாக அரியானா மாநில போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பஞ்சாப் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து இந்த நாசவேலையில் ஈடுபட முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சரியான நேரத்தில் தகவல் வந்ததால் மிகப் பெரிய நாசவேலை திட்டத்தை முறியடித்துள்ளதாக அரியானா மாநில போலீஸ் டி.ஐ.ஜி. ரஞ்சீவ்தலால் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அம்பாலா நகரில் உள்ள ராணுவ முகாமை தகர்க்க இந்த வெடிபொருட்களை கொண்டு வந்திருக்கலாம். உண்மையை கண்டறிய எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 18 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்
19 May 2024பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
பஞ்சாபை வீழ்த்தியது ஐதராபாத்
19 May 2024ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
நடராஜன்....
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.