முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவபெருமான் படத்தை காட்டி மக்களவையில் ராகுல் பேச்சு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      இந்தியா
Rahul 2024-06-10

Source: provided

புதுடெல்லி : மக்களவையில் சிவபெருமான் படத்தை காட்டி ராகுல் காந்தி பேசினார். அப்போது, இப்படி கடவுள் புகைப்படங்களை  காட்டி வருவது அரசியல் சாசன விதிமீறல் என சபாநாயகர் குறிப்பிட்டார். 

மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. பழங்குடியினர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்தியா என்பதற்கான கருத்தியலே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் சிறையில் உள்ளனர். நானும் தாக்குதலுக்கு உள்ளானேன். அமலாக்கத்துறை 55 மணி நேரம் என்னிடம் நடத்திய தொடர் விசாரணையை ரசித்தேன். 20-க்கும் மேற்பட்ட வழக்குகள், 2 ஆண்டுகள் சிறை, என்னுடைய வீடு பறிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சிவபெருமான் படத்தை காட்டி ராகுல் காந்தி பேசியபோது,  இப்படி கடவுள் புகைப்படங்களை காட்டி வருவது அரசியல் சாசன விதிமீறல் என சபாநாயகர் குறிப்பிட்டார். அவையில் சிவபெருமான் படத்தை காட்ட கூடாதா? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு, எந்தவொரு பதாகையையும் காட்டக்கூடாது என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவுறுத்தல் வழங்கினார். 

ஆனாலும் சபாநாயகரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இஸ்லாமிய மதச்சின்னம், குருநானக் புகைப்படத்தை காட்டி ராகுல் காந்தி பேசினார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, சிவனின் கை முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக உள்ளது. உண்மையையும், அகிம்சையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது சிவனின் முத்திரை. எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. 

அகிம்சையை வலியுறுத்தவே சிவனின் இடப்புறம் திரிசூலம் உள்ளது. சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எதிர்கட்சிகளை திட்டமிட்டு மோடி அரசு பழி வாங்குகிறது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்ல. பா.ஜ.க.வினருக்கு அதிகாரம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. 

பிரதமர் மோடி கடவுளுடன் நேரடித்தொடர்பில் உள்ளார். கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக்கொண்டு இருக்கிறார். கடவுளின் அவதாரமான பிரதமர் மோடி, வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் காந்தியை அறிந்திருக்கலாம். இந்தியா என்பது மூன்று அடிப்படை அம்சங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சகிப்புத்தன்மை உள்ளிட்ட மூன்று அம்சங்கள் மீது இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இந்து தர்மத்தை கூட பா.ஜ.க. பின்பற்றுவது இல்லை. ஒட்டுமொத்த இந்துக்களும் பா.ஜ.க.வோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து