முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி: `டிட்டோ ஜாக்' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      தமிழகம்
Anbil-Mahesh 2024-03-23

சென்னை, இடை நிலை ஆசிரியர்களின்  31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர் அளித்த வாக்குறுதியை ஏற்று `டிட்டோ ஜாக்' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) போராடி வருகிறது.

கடந்த 10-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்திய டிட்டோ ஜாக் வருகிற 30, அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து அதன் மாநில நிர்வாகிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்திற்கு அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கே.பி.ரக்ஷித், வின்சென்ட் பால்ராஜ், மயில், தாஸ், சேகர், தியோடர் ராபின்சன், சண்முகநாதன், காமராஜ், ஜெகநாதன், ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். டிட்டோஜாக் கோரிக்கையில் எதை எதை உடனே நிறைவேற்ற முடியும் என்பதை விளக்கினார்கள்.

அமைச்சரும் டிட்டோ ஜாக் நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சு வார்த்தைக்கு பிறகு டிட்டோ ஜாக் சுழல்முறை தலைவர் காமராஜ் நிருபர்களை சந்தித்தார். டிட்டோஜாக் கோரிக்கைகள் குறித்து எங்களை அழைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிதி சார்ந்த பணி சார்ந்த கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினோம்.

அரசாணை 243-யை ரத்து செய்வது பற்றியும் அதன் பாதகங்கள் பற்றியும் எடுத்து சொன்னோம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியங்கள் முரண்பாடு பற்றியும் எடுத்து கூறினோம். இவற்றை அமைச்சர் புரிந்து கொண்டு முதல்வரிடம் இதை தெரிவித்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். 27-ம் தேதி பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க செல்லும் போது கல்வித்துறைக்கு வரவேண்டிய நிதியை பெற வலியுறுத்த இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி உங்கள் கோரிக்கைகளில் எதை எதை உடனே நிறைவேற்ற முடியுமோ அதை முதல்வரிடம் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதை ஏற்று கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து