எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார். அதில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ரவுடி சீசிங் ராஜாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39 வயது), அவரது கூட்டாளிகள் திருவேங்கடம் (33 வயது) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சகோதரர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுன்டரில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
தொடர்ந்து இந்த கொலையின் பின்னணியில் இருந்ததாக மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆட்களை கடத்தி தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை வாங்குவது என பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
குறிப்பாக, 5 முறை குண்டர் தடுப்பு காவலிலும் சீசிங் ராஜா அடைக்கப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற 3-வது என்கவுண்டர் இதுவாகும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேளச்சேரி பார் ஊழியரை மிரட்டிய வழக்கு தொடர்பாக சீசிங் ராஜா தேடப்பட்டு வந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பாகவே ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் வைத்து அவரை நேற்று (நேற்று முன்தினம்) கைது செய்தோம். வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் தலைமையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சீசிங் ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் காவல்துறை வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ரவுடி சீசிங் ராஜாவை சுட்டதில் அவர் உயிரிழந்தார். நாங்கள் விசாரிக்கவே கைது செய்தோம்; அவர் தாக்கியதால்தான் என்கவுன்டர் செய்யும் சூழல் உருவானது.
சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீசிங் ராஜாவை ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்துக்கும் அதிகமான வழக்குகளில் சீசிங் ராஜா மீது பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 5 days ago |
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
22 Sep 2024துபாய் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதல
-
மேற்கு வங்கத்தை ஒட்டிய கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது : தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
22 Sep 2024சென்னை : மேற்கு வங்கத்தை ஒட்டி இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரயில் திட்ட நிதி விவகாரம்: பிரதமரை 27-ம் தேதி சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Sep 2024சென்னை : மெட்ரோ ரயில் திட்ட நிதி, புதிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
செஸ் ஒலிம்பியாட் தொடர்: இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை
22 Sep 2024புடாபெஸ்ட் : செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
முதல் முறையாக...
-
துலிப் கோப்பை தொடர்: இந்தியா 'ஏ' அணி சாம்பியன்
22 Sep 2024மும்பை : துலிப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தலா 1 முறை...
-
சேப்பாக்கம் முதல் டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
22 Sep 2024சென்னை : சேப்பாக்கம் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் அபார பந்துவீச்சில் நிலைகுலைந்த வங்காளதேச அணி பரிதாபமாக தோல்வியடைந்தத
-
திருப்பதி லட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
22 Sep 2024புதுடெல்லி : லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தவேண்டும் என மனுதாரர் கேட்டுக்
-
தேர்தலில் 42.31 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி: இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயக : எளிமையான முறையில் இன்று பதவியேற்பு விழா
22 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
-
திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீடு பா.ஜ.க.வினரால் முற்றுகை
22 Sep 2024அமராவதி : திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பா.ஜ.க. யுவமோச்சா பிரிவினர் முற்றுகையிட்டனர்.
-
தேர்தலில் 42.31 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி: இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயக : எளிமையான முறையில் இன்று பதவியேற்பு விழா
22 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2024.
23 Sep 2024 -
தமிழகத்தில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2024சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் ? சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் விளக்கம்
23 Sep 2024சென்னை, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார்.
-
ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
23 Sep 2024சென்னை, ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
முதல்வராக முறைப்படி பதவியேற்றார்: கெஜ்ரிவால் நாற்காலியை காலியாக விட்ட அதிஷி
23 Sep 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் அம்மாநில முதல்வர் அதிஷி.
-
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Sep 2024சென்னை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செ
-
இலங்கையின் 9-வது புதிய அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசாநாயக்க: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
23 Sep 2024கொழும்பு, இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
-
செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம்: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2024புதுடெல்லி, குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் க
-
ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை
23 Sep 2024பெரூட், ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி: `டிட்டோ ஜாக்' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
23 Sep 2024சென்னை, இடை நிலை ஆசிரியர்களின் 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர் அளித்த வாக்குறுதியை ஏற்று `டிட்டோ ஜாக
-
அமெரிக்கா சென்றார் கமல்
23 Sep 2024சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
-
லப்பர் பந்து விமர்சனம்
23 Sep 2024குடும்பம் வேலை என அனைத்து பணிகளையும் விட்டு விட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அட்ட கத்தி’ தினேஷ் ஒரு புறம்.
-
அமெரிக்க அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி
23 Sep 2024நியூயார்க், அமெரிக்காவில் அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ரியா சிங்காவுக்கு மகுடம்
23 Sep 2024ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா.
-
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்
23 Sep 2024கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள்.