எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை தி.மு.க. அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லையென தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது., பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை, ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தன் தந்தை நாணய வெளியீட்டு விழாவிற்கு உங்களின் ஒரு வார்த்தை அழைப்பை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்தார். ஒருவரின் மகிழ்ச்சிக்காக நடைபெற்ற கார்பந்தயத்திற்கு ஒரே நாளில் மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்றீர்கள். நடுகடலில் எழுதாத பேனாசிலை வைக்க மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்ற அதிகாரம் மிக்க நீங்கள், ஏன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிபடும்போதும், கொல்லப்படும்போதும், உளமார்ந்த உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றீர்கள்?
தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்.
எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள். இனியாவது விரைந்து செயல்பட்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 5 days ago |
-
தமிழகத்தில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2024சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2024.
23 Sep 2024 -
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் ? சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் விளக்கம்
23 Sep 2024சென்னை, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார்.
-
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Sep 2024சென்னை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செ
-
இலங்கையின் 9-வது புதிய அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசாநாயக்க: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
23 Sep 2024கொழும்பு, இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
-
ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
23 Sep 2024சென்னை, ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம்: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2024புதுடெல்லி, குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் க
-
ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை
23 Sep 2024பெரூட், ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
முதல்வராக முறைப்படி பதவியேற்றார்: கெஜ்ரிவால் நாற்காலியை காலியாக விட்ட அதிஷி
23 Sep 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் அம்மாநில முதல்வர் அதிஷி.
-
அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி: `டிட்டோ ஜாக்' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
23 Sep 2024சென்னை, இடை நிலை ஆசிரியர்களின் 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர் அளித்த வாக்குறுதியை ஏற்று `டிட்டோ ஜாக
-
அமெரிக்கா சென்றார் கமல்
23 Sep 2024சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
-
லப்பர் பந்து விமர்சனம்
23 Sep 2024குடும்பம் வேலை என அனைத்து பணிகளையும் விட்டு விட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அட்ட கத்தி’ தினேஷ் ஒரு புறம்.
-
அமெரிக்க அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி
23 Sep 2024நியூயார்க், அமெரிக்காவில் அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
-
கடைசி உலகப்போர் - விமர்சனம்
23 Sep 2024இவ்வுலகில் எதுவும் இல்லாத போது ஒற்றுமையாக இருக்க நினைக்கும் மக்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கும் போது ஒற்றுமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கருவாகக் கொண்டு
-
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்
23 Sep 2024கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள்.
-
அமெரிக்காவில் சம்பவம்: 18 ஆண்டுகளாக பக்கத்து வீட்டின் மின் கட்டணத்தை செலுத்திய நபர்
23 Sep 2024கலிபோர்னியா, அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் என்ற நகரத்தில் வசிக்கும் ஒருவர், 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ரியா சிங்காவுக்கு மகுடம்
23 Sep 2024ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா.
-
எச்.எம்.எம் - விமர்சனம்
23 Sep 2024திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி தற்போது வெளியாகி இருக்கும் படம் ஹெச்.எம்.எம்.
-
‘இந்தியாவின் தூதுவர்கள் நீங்கள்’ அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
23 Sep 2024நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
-
ஆவினின் ஹலால் நெய் வழங்கப்படுவதாக தகவல்: வதந்தி என அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
23 Sep 2024சென்னை, கோவில்களுக்கு ஆவினின் ஹலால் நெய் வழங்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கமளித்துள்ளது.
-
பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதி
23 Sep 2024அமெரிக்கா, பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பொழுது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும் என உறுதியளித்தார்.
-
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
23 Sep 2024சென்னை, சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், கண்ணப்பர் திடலில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணப்
-
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இணையதளம், மொபைல் செயலி தொடக்கம்
23 Sep 2024சென்னை : அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
-
சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற சரண் கோரிக்கை
23 Sep 2024சென்னை : சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற முதல்வர் அலுவலகத்தில் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா
23 Sep 2024கொழும்பு, இலங்கை பிரதமர் பதவியை தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார்.