எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை : கோவை, நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்தார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர்.
மேயர் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து மேயர் ராஜினாமா செய்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் 5-ம் தேதி நடக்க உள்ள நிலையில், நாளை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. நெல்லை மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது. கே.ஆர்.ராஜூ, கிட்டு, உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், பவுல்ராஜ் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை சந்தித்து மேயர் நாற்காலியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர்.
இதற்கிடையே கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.
மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இதைதொடர்ந்து, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார். இதனால், காலியாக உள்ள கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவை மேயர் பதவியை பிடிக்க 6 பெண் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, கோவை திமுகவில் பரீட்சயமான முகமான 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 34வது வார்டு கவுன்சிலர் மாலதி, எம்.பி கனிமொழி மூலம் மேயர் பதவிக்கு காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா, 36வது வார்டு கவுன்சிலர் தெய்வானை, 63வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோரும் கோவை மேயர் போட்டியில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 17 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு:46 ரன்களுக்கு ஆல்அவுடாகி இந்தியா மோசமான சாதனை
17 Oct 2024பெங்களூரு: நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்திய அமி ஆல்அவுடாகி மோசமான சாதனை படைத்துள்ளது.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
17 Oct 2024சென்னை, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து
17 Oct 2024சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Oct 2024சென்னை, மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டிரம்புக்கு 70 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த எலான் மஸ்க்
17 Oct 2024வாஷிங்டன், டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலான் மஸ்க் 70 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5-ஏ தேர்வு அறிவிப்பு
17 Oct 2024சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
17 Oct 2024சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க மு
-
ரூ.1,500 கோடியில் நவீனமயமாகும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை: இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு
17 Oct 2024சென்னை, சென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
-
வடிகால் பணிகளை அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Oct 2024சென்னை, மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க. அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் மழைநீர் தேங்கி இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
17 Oct 2024சென்னை, உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வின் முடிவுகள் இன்று 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
சுடச்சுட பிரியாணி பரிமாறி தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
17 Oct 2024சென்னை, கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டு மகிழ்ந்தார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பரிந்துரை
17 Oct 2024புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
-
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு: ஆதாரங்கள் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புதல்
17 Oct 2024ஒட்டாவா, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு
17 Oct 2024சேலம், காவிரி நீர்ப்பிடிப்பு பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை வெளியீடு
17 Oct 2024திருமலை, திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை 19-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ள
-
புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
17 Oct 2024ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.
-
அசாமில் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் சட்ட பிரிவு செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
17 Oct 2024புது டெல்லி, அசாமில் ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971 வரை புலம்பெயர்ந்து குடியேறியவர்களுக்கு அம்மாநில குடியுரிமையை உறுதி செய்யும் இந்திய குடியுரிமைச் சட்டப் பிரிவு 6
-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு
17 Oct 2024சென்னை; 2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசா
-
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை விதித்த இத்தாலி பிரதமர்
17 Oct 2024ரோம், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
-
சாதனை பட்டியலில் ஹென்றி
17 Oct 2024பெங்களூரு: முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
-
ஜஸ்டின் ட்ரூடோவின் செயலால் இந்தியா-கனடா உறவில் பாதிப்பு மத்திய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
17 Oct 2024புதுடெல்லி: இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
-
பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
17 Oct 2024சென்னை, பருவ மழை காலங்களில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
-
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்: அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை
17 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
அம்மா உணவகங்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு தகவல்
17 Oct 2024சென்னை, மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது,
-
ஷேக் ஹசீனாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு: நவ. 18-க்குள் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு
17 Oct 2024டாக்கா, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.