முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் முடிந்தது

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. இந்த நிலையில், தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களிலேயே முடிந்தது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்  14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் வரவுள்ளன. மேலும், ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. 

இதை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்ல வசதியாக, ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இந்நிலையில், ஜனவரி 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று  காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. 

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, கே.கே. முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 5 நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. 

இந்த 5 ரயில்களில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, ரெக்ரெட் என்று வந்தது. இது போல, சென்னையில் இருந்து தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, முறையே 258, 173 என்று காத்திருப்போர் எண்ணிக்கை வந்தது. 

முக்கிய ரயில்கள் அனைத்திலும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது. இதையடுத்து மற்ற வகுப்புகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்க பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்ததால், முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலானவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து