எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் கர்நாடகா மற்றும் கோவா அணிகள் மோதின. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 26.3 ஓவர்களில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில், கர்நாடகா 36.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 5/41 எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கோவா அணியில் அபினவ் தேஜ்ரானா (109) சதம் அடிக்க கோவா 413 ரன்களை குவித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா அணி 30.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அர்ஜுன் 13.3 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அர்ஜூன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அர்ஜுன், இதுவரை சீனியர் மூன்று வடிவங்களில் 49 போட்டி ஆட்டங்களில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 13 முதல் தர ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
______________________________________________________________________
முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள்
வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர். குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
______________________________________________________________________
கவுண்டி தொடர்: ரகானே விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரகானே (வயது 36). இவர் இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். சமீப காலமாக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
இதில் ஒருநாள் தொடரில் அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது. இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார். இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
______________________________________________________________________
காம்பீரின் ஐ.பி.எல். கனவு அணி
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் காம்பீர்ஐ.பி.எல். தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களை வைத்து சிறந்த ஐ.பி.எல். கனவு லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.
அதில் தொடக்க ஆட்டக்காரராக கொல்கத்தா அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய ராபின் உத்தப்பாவை தேர்ந்தெடுத்துள்ளார். காம்பீர்தேர்வு செய்த அணியில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காம்பீர்தேர்வு செய்த சிறந்த ஐ.பி.எல். கனவு 11 அணி பின்வருமாறு., கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், ஜாக் காலிஸ், யூசுப் பதான், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, டேனியல் வெட்டோரி மற்றும் மோர்னே மோர்கல்.
______________________________________________________________________
நாதன் லயன் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்தால் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை தங்களால் வீழ்த்த முடியும் என அந்நாட்டின் ஸ்பின்னர் நாதன் லயன் கூறியுள்ளார். மேலும் இம்முறை இந்தியாவை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பற்றி இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லியிடம் பேசி கேட்டறிந்தேன். மிடில் ஆர்டரில் சர்பராஸ் அல்லது ராகுல் வருவாரா என்பது தெரியவில்லை. இந்தியா முழுவதும் சூப்பர்ஸ்டார்களை கொண்ட வீரர்களாகும். விராட் கோலி அங்கே இருப்பார். ரிஷப் பண்ட் வங்காளதேச தொடரில் விளையாட உள்ளார். எனவே அந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் பெரிதாகி வருகிறது. அதனால் டெஸ்ட் போட்டிகள் இறப்பதாக மக்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்கள் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்களாகி விட்டது. அதைப்பற்றி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போதே நான் சிந்திக்கத் தொடங்கினேன். எனது கண்களை நீண்ட காலமாக வைத்துள்ளேன். இம்முறை ஆஸ்திரேலியா 5 - 0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று நான் கணிக்கிறேன்" என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 min 3 sec ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 5 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2024.
19 Sep 2024 -
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க எடப்பாடி வலியுறுத்தல்
19 Sep 2024சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
திருப்பதி பிரமோற்சவ விழா: மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை
19 Sep 2024திருப்பதி, கருட சேவையையொட்டி 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை துண்டுத்துண்டாக வெட்டிக் கொன்றவர் கைது: சி.சி.டி.வி. மூலம் சில மணி நேரத்தில் பிடிபட்டார்
19 Sep 2024சென்னை, சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இருந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர
-
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு
19 Sep 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் ஆர்.அப்துல்கரீம், மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாந
-
லெபனானில் வெடித்த வாக்கி டாக்கிகள் எங்களது தயாரிப்பு அல்ல: ஜப்பான் நிறுவனம் மறுப்பு
19 Sep 2024டோக்கியோ, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த வாக்கி டாக்கிகள் தங்கள்
-
துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பது எப்போது ? அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில்
19 Sep 2024சென்னை, உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
19 Sep 2024மதுரை, மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சென்னையில் தமிழக காங். கட்சியின் செயற்குழு கூட்டம்: ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கண்டித்து தீர்மானம்
19 Sep 2024சென்னை, தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
-
ஆந்திராவில் வரும் 1-ம் தேதி முதல் தனியார்மயமாகும் மதுபான கடைகள்: ரூ. 99-க்கு புதுவகை மது அறிமுகம்
19 Sep 2024அமராவதி, ஆந்திராவில் வரும் 1-ம் தேதி முதல் ரூ. 99-க்கு 180மிலி மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன.
-
விண்வெளியில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து
19 Sep 2024நியூயார்க், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வலைதளங்களில்
-
கங்கைகொண்டான் சிப்காட் பூங்காவில் பெண்களுக்கான குடியிருப்பு வளாகம்: டி.பி. சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
19 Sep 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.
-
தமிழ்நாட்டில் இன்று வெயில் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
19 Sep 2024சென்னை, தமிழகத்தில் இன்று 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சத்துணவு முட்டை விவகாரம்: உணவகத்திற்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்: சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்
19 Sep 2024திருச்சி, துறையூரில் தனியார் உணவத்திற்கு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகளை விற்பனை செய்த புகாரில் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார
-
உதகையில் நீர் பனிப்பொழிவு: கடும் குளிரால் மக்கள் அவதி
19 Sep 2024ஊட்டி, நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் நீர் பனி கொட்டுவதால் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
-
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு
19 Sep 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடு: கனடா
19 Sep 2024ஒட்டாவா, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது: பா.ஜ.க.வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
19 Sep 2024சென்னை, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பா.ஜ.க.வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உ.பி.யில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
19 Sep 2024மதுரா, உத்தரபிரதேசத்தில் நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன.
-
மாடம்பாக்கத்தில் வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Sep 2024சென்னை, அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தாம்பரம் மாடம்பாக்கத்தில் வரும் 26-ம் தேதி அ.தி.மு.க.
-
அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2,100 வழங்கப்படும்: அரியானாவில் பா.ஜ.க. வாக்குறுதி
19 Sep 2024சண்டிகர், அரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
19 Sep 2024மேட்டூர், மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு எதிரொலியாக, இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
19 Sep 2024சென்னை, விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.